naanmedia.in :
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!  *தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!*  தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.  இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.  மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.  1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.  இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 🕑 3 மணித்துளிகள் முன்
naanmedia.in

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்! *தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!* தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது. 1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான

வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருத்தேர் மலையை சுற்றிவந்தது 🕑 5 மணித்துளிகள் முன்
naanmedia.in

வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருத்தேர் மலையை சுற்றிவந்தது

வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இதன் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலை, மரியாதை 🕑 5 மணித்துளிகள் முன்
naanmedia.in

வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலை, மரியாதை

வேலூர் மாவட்ட மாநகர அமமுக செயலாளராக சதீஷ்குமாரை, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனையெடுத்துவேலுர் பழைய மாநகராட்சி

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 🕑 5 மணித்துளிகள் முன்
naanmedia.in

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பா. இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை”

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவினர் கோரிக்கை 🕑 13 மணித்துளிகள் முன்
naanmedia.in

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவினர் கோரிக்கை

பெண்கள் மாதவிடாயின் போது 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்த ‘ஹரா’ திரைப்படத்தின் மூலம்

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தில் நடைபெற்ற வாலிபால் பாஷ் லீக் -2 போட்டி 🕑 13 மணித்துளிகள் முன்
naanmedia.in

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தில் நடைபெற்ற வாலிபால் பாஷ் லீக் -2 போட்டி

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் எஸ். பி பட்டினத்தில் நடைபெற்ற வாலிபால் பாஷ் லீக் -2 ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் காவல்துறை மற்றும்

load more

Districts Trending
தவெக   முதலமைச்சர்   முதல்வர் விஜய்   தொழில்நுட்பம்   திமுக   சமூகம்   சிகிச்சை   அதிமுக   அஜித் குமார்   பக்தர்   வரலாறு   ஐபிஎல்   இலவசம் பயணம்   மாவட்ட ஆட்சியர்   டிஜிட்டல்   தீர்ப்பு   திருமணம்   ஆளுநர் அழைப்பு   ஹாட் செய்தி   மாணவர்   கருப்பு பட்டியல்   மருத்துவமனை   தாயார் மோகினி   யூடியூப் அலைவரிசை   விளையாட்டு   நீதிமன்றம்   திரைப்படம்   தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ்   வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ்   உச்சநீதிமன்றம் உத்தரவு   எக்ஸ் தளம்   ரஷிய படை   குற்றவாளி   இரங்கல்   பலத்த மழை   பள்ளி   கொலை   உடல்நலம்   அஜித்குமார்   இராஜஸ்தான் அணி   வணிகம்   டிரம்ப்   சட்டமன்றத் தேர்தல்   விஜய் அஞ்சலி   ரிசர்வ் வங்கி   வழக்குப்பதிவு   வெளிநாடு   வாட்ஸ் அப்   லட்சக்கணக்கு   மேஸ்திரி படுகொலை   தீர்ப்பு உயர்நீதிமன்றம்   சிவகுமார்   முதலமைச்சர் விஜய்   உதயநிதி ஸ்டாலின்   சட்டமன்ற உறுப்பினர்   எடப்பாடி பழனிச்சாமி   கால அவகாசம்   ரன்கள்   போக்குவரத்து   சேனல்   திருவள்ளுவர்   மூப்பு   ஐபிஎல் கொண்டாட்டம்   காவல் நிலையம்   விமர்சனம்   கட்டணம்   அரசு மருத்துவமனை   அமைச்சர் ரமேஷ்   தடைஆளுநர் மாளிகை   புகைப்படம்   வாக்காளர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   இராஜினாமா   பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்   மெட்ரோ ரயில்   காவி உடை   தள்ளுபடி விவகாரம்   இசை நிகழ்ச்சி   ஆளுநர் அழைப்பு சென்னை   போராட்டம்   வைகாசி விசாகம்   விக்கெட்   தரிசனம்   பொருளாதாரம்   தாயார் உடல்   கட்டுரை   கோடிபோா்க் காலம் பாலியல் வன்கொடுமை   லட்சம் கோடிபோா்க் காலம் பாலியல் வன்கொடுமை   லட்சம் கோடிபோா்க் காலம்   லட்சம் கோடிபோா்க்   சுகாதாரம்   சட்டமன்றம்   குஜராத் டைட்டன்ஸ்   பயணி   குற்றம் வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ்   குற்றம் வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர்   சட்டம் ஒழுங்கு   குற்றம் வழக்கு தொடர்வுத்துறை   சிறை   புயல்  
Terms & Conditions | Privacy Policy | About us